மதுரை, ஜன. 22- மதுரைக்கான திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 21 வெள்ளிக்கிழமையன்று மதுரை மாவட்டத்துக் கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி புதிய பல திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளி யிட்டார். நிச்சயம் இந்த நாள் மதுரை மாவட்டத் திற்கு ஒரு சிறந்த நாள் என்றே நான் நினைக் கின்றேன்.ஏறக்குறைய 319 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு நடை முறையாகி இருக்கிறது இது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிற செய்தி. அதுபோக புதிதாக 11 அறி விப்புகளை தமிழக முதல்வர் அறிவித்திருக்கி றார் அதற்கு மதுரையின் நாடாளுமன்ற உறுப்பி னர் என்கிற முறையில் என்னுடைய மட்டற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையினுடைய சமூக பிரச்சனைக்கு மிக முக்கியமான காரணம் வேலையின்மை. வேலை யின்மைக்கு அடிப்படை காரணம் இங்கே தொழில் வளர்ச்சி அடையாதது.தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் பேட்டைகள் போதிய அளவில் இல்லாதது. இன்றைக்கு தமிழக முதல்வர் மதுரை யில் உடனடியாக தொழில்பேட்டை அமைக்கப் படும் என்று அறிவித்திருக்கிறார். இது மதுரை யின் வளர்ச்சிக்கு ஆதாரமான ஒரு அறிவிப்பு. அதே போல மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் என்கிற அடிப்படையில் மாநகராட்சியுடன் புதி தாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைக ளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கி றார்.
4 பாலங்கள்
மதுரையினுடைய போக்குவரத்து நெரி சலை குறைப்பதற்கு மதுரையின் நகர்ப்பகுதி களில் செயல்படும் சந்தைகளை வெளியிலே கொண்டு செல்வதற்கு ரூ50 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 பாலங்கள் மண்டேலா நகர் பாலம், விரகனூர் பாலம் அப்பல்லோ சந்திப்பு பாலம், அரசு ராஜாஜி மருத்துவ மனை சந்திப்பு பாலம் என்று 4 புதிய பாலங்க ளுக்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கிறார். மதுரையினுடைய போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்களுடைய தேவை மிக அதிகம். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மதுரையினுடைய வளர்ச்சி விகிதம் என்பது நான்கில் ஒரு பகுதி தான் என்பதை பார்த்தோம். எனவே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விரைவில் துவக்கப் பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன்.
மிக முக்கியமாக மூன்று அறிவிப்புகள்
இங்கே கூடுதல் சிறப்புகளாக மதுரை வைகை யினுடைய வடகரை பகுதியில் 100 கோடி ருபாய் செலவில் புறநகர் சாலை இணைப்பிற் கான திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட சர்வதேச தரத்தோடு நவீன அரங்கம் அமைக்கப் படும் என்று அறிவித்திருக்கிறார். போதுமான மருத்துவ வசதிகள், அதேபோல காளைக ளுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் இடம்பெறும் ஒரு அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது நம்முடைய மாவட்டத்தின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த திட்டத்தினை இன்றைக்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதே போல மிக முக்கியமான இன்னொரு அறிவிப்பு மதுரையினுடைய மத்திய சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பது.சென்னையினுடைய மத்திய சிறைச் சாலை புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டதால் சென்னையின் மையப்பகுதியில் மிகப்பெரிய ஒரு இடம் கிடைத்தது அது மருத்துவமனைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். அதே போல மதுரையினுடைய சிறைச்சாலை என்பது ஆதியிலே மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த இராணி மங்கம்மாள் சத்திரத்தின் ஒரு பகுதியாக 1865 முதல் 1905 வரை சுமார் 40 ஆண்டு காலம் இருந்தது. அதற்குப் பிறகுதான் இன்றைக்கு இருக்கிற பகுதிக்கு 1905 ம் ஆண்டு மாற்றினார்கள். அது புதிய சிறைச்சாலை அதனால்தான் அது நியூ ஜெயில் ரோடு என்றிருக்கிறது. பழைய சிறை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலே உள்ளது. அன்றைக்கு மதுரை நகரத்தின் நெரிசல் அதிகமானதால் புறநகருக்கு மாற்றினார்கள். மாற்றப்பட்டு 115 ஆண்டுகள் ஆகிறது இன்றைக்கு நகரின் மையப் பகுதியில் 35 ஏக்கர் இடத்தில் அமைந்து இருக்கிறது இந்த சிறைச்சாலை. அதனை மாற்றி புறநகருக்கு கொண்டு செல்ல வேண்டும். அதில் பல்வேறு ஆலோசனைகள் இருக்கிறது நாமும் ஆலோ சனைகள் சொல்லி இருக்கிறோம். எனவே முதல் கட்டமாக சிறைச்சாலையை மதுரையின் மையப்பகுதியில் இருந்து புறநகர் மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்கள். மதுரையின் வளர்ச்சிக்கு ஒரு மையமாக அது மாற இருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளுக்கு ஏறக்குறைய 25 கோடி ரூபாயும் வீரவசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்புக்கு 18 கோடி ரூபாயும் அறிவித்தி ருக்கிறார். இந்த 11 திட்டங்களும் புதிய அறிவிப்புகளாக வந்திருக்கிறது.
வளர்ச்சிக்கு...அடுத்தகட்ட நகர்வுக்கு
இந்த புதிய அறிவிப்புகள் மதுரையினுடைய வளர்ச்சிக்கு மதுரையினுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு மதுரை மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரை நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன் மற்றும் கே.ராஜேந்திரன் மூவரும் நேரடியாக சந்தித்தோம். இருபது நிமிடங்க ளுக்கு மேலாக தமிழக முதல்வர் மதுரை மாவட் டத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் 23 கோரிக்கைகளை முன் வைத்தோம். இவையனைத்தையும் கேட்டு மதுரையின் வளர்ச்சிக்கு இந்த அரசு பங்களிப்பு செய்யும் என்று உறுதியளித்தார். முதல்வரின் இன்றைய அறிவிப்பில் ஏழு கோரிக்கைகள் இடம்பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழக முதல்வருக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் என்கிற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எங்களது நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார் . தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு சு.வெங்கடேசன் எம்.பி., அளித்த பதில்கள் வரு ாறு: சிறைச்சாலையில் என்ன அமைக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இங்கு ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் உலக நாகரீகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல அருங்காட்சியகம் அமைந்துள்ளார்கள். அதுபோல் இந்தியாவில் எங்கும் அதுபோன்ற அருங்காட்சியகங்கள் இல்லை. அது போன்ற அருங்காட்சியகம் மதுரையில் அமைப்பதற்கு தற்போது உள்ள மத்திய சிறைச்சாலை உள்ள இடம். ஒரு நல்ல இடம் சிந்து முதல் வைகை நதி வரை உள்ள நாகரிகத்தை பற்றி இங்கு அருங்காட்சியகம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் அமைக்க வேண்டும். தமிழர் பண்பாட்டை உலகுக்கு கொண்டு செல்லும் வகையில் அது அமைய வேண்டும். அதற்கு சர்வதேச அளவிலான ஆலோசனைக் குழு ஒன்றையும் அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது அதன்படி இங்கு அமைக்கப்பட்டால் அது மதுரையின் வளர்ச்சிக்கு அது ஒரு மிகப்பெரிய பங்காக இருக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்ததா என்ற கேள்விக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது இனி எதுவும் இல்லை.மருத்துவமனைக்கான நில வகை மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இனி ஒன்றிய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இரண்டு தினங்க ளுக்கு முன் தமிழக முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த மனுவில் ஒன்றிய அரசின் எய்ம்ஸ் உள்ளிட்ட 3 திட்டங்கள் மதுரை யில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம் நெய்பர் (தேசிய கல்வி ஆராய்ச்சி கழகம்) மற்றும் மதுரை சர்வ தேச விமான நிலையம் இந்த மூன்று கோரிக்கை களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
அகழாய்வு அறிவிப்பு மட்டற்ற மகிழ்ச்சி
தமிழக முதல்வர் கீழடி மற்றும் புதிய அகழாய்வுகள் குறித்து அறிவிப்பினை வெளி யிட்டுள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அறிவிப்பு. நான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசின் இந்த அறிவிப்பை பாராட்டி பதிவு செய்துள்ளேன். 7 இடங்களில் புதிய அகழாய்வு ஏனென்றால் நம்முடைய அகழாய்வு மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து செய்துகொண்டே இருக்க வேண்டும். நவீன உலகத்திற்கு நவீன ஆய்வுகளின் அடிப்படை யில் நவீன கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப் போடு ஆய்வு செய்து மனித குலத்தின் பொது சமூகத்திற்கு அதை ஒப்படைக்க வேண்டி யுள்ளது. ஏனென்றால் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் அனைத்து திட்டங்களும் அவர்க ளுடைய கருத்தாக்கத்திற்கு ஏற்றாற்போல் நடக்கின்றது. அது தமிழகத்திற்கும் போதிய நிதி ஒதுக்கீடு அளிப்பதில்லை குறிப்பாக தென் மாநிலங்களுக்கு அது முறையான நிதி ஒதுக்கீடு அளிப்பது இல்லை. இந்த நிலையில் தமிழக அரசு ஏழு இடங்களில் ஆய்வு நடத்தப் படும் என்று அறிவித்துள்ளது. கீழடி, கொந்தகை, அகரம் இந்த மூன்று பகுதிகளும் அதேபோல் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக் கின்றது என்று கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்தி ரன் ஆகியோர் உடனிருந்தனர்.