districts

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க கூட்டத்தில் பாஜகவினர் அராஜகம்

கும்பகோணம்,  ஜன.10 -  திருபுவனம் பட்டு கூட்டு றவு சங்க பேரவை கூட்டத் தில், காலணியை வீசி அரா ஜகம் செய்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து (சிஐடியு) கைத்தறி நெசவாளர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் என்.பி. நாகேந் திரன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபு வனம் பட்டு கூட்டுறவு சங்க 68 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் ஜன.8 அன்று காலை 10 மணியளவில் சங்க மேலாண்மை இயக்குநர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் 2022-23 ஆம் ஆண்டு சங்க தணிக்கை கணக்கை முடித்து, அங்கத் தினர்களிடம் அங்கீகாரம் பெற்று போனஸ் டிவி டெண்ட் வழங்கும் கூட்ட மாகும். இக்கூட்டத்தை தீபா வளிக்கு முன்பே நடத்தி யிருக்க வேண்டும். ஆனால்  தணிக்கை கணக்கை முடிக்க தாமதமானதால், ஜன. 8 அன்று நடைபெற்றது.  கூட்டத்தில் பங்கேற்ற  பாஜகவினர், ‘ஆண்ட றிக்கை புத்தகத்தில் பிரத மர் மோடியின் படத்தை போடவில்லை’ என்று கூறி ரகளையில் ஈடுபட்டதுடன், அதிகாரிகள் மற்றும் அலுவ லர்கள் மீது காலணிகளை வீசியும், நாற்காலிகள் தூக்கி  எறிந்தும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப் பட்ட நிலையில், கல வரத்தில் ஈடுபட்ட பாஜக வினர் இரண்டு பேர் மீதும்  வழக்குப் பதிந்து சிறை யில் அடைத்தனர். இச்சம்ப வத்தில் ஈடுபட்ட பாஜக வினரை தமிழ்நாடு கைத்தறி  நெசவாளர்கள் சம்மேளனத் தின் மாநிலக் குழு வன்மை யாக கண்டிக்கிறது.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.