districts

img

மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி: குடவாசல் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

திருவாரூர், அக்.30 - மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி யில் குடவாசல் அரசுப் பள்ளி மாணவி முத லிடம் பெற்றுள்ளார். டான்சிங் டால் ஈவென்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கத் தின்கீழ் 13-வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியில் திருவாரூர் மாவட்டம், குட வாசல் அருகே அரசு உதவிபெறும் மஞ்சுக் குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி  ஜோ.தருணிகா கலந்து கொண்டார்.  இதில்ஆறு சுற்று விளையாட்டில்  5 சுற்றுகளை வென்று முதலி டத்தை பிடித்தார். தஞ்சாவூர்  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்,  மாணவி ஜோ.தருணிகாவை பாராட்டி பரிசும், வெற்றிப் பதக்கமும்  வழங்கி வாழ்த்தினார். தற்போது, இவர் மாநில அள வில் நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவி தருணிகா ஏற்கனவே தமிழ்நாடு  பள்ளி கல்வித்துறை சார்பாக திருவாரூர், நாகை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட  மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்று வென்றுள்ளார்.  இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தியின் பேத்தி என்பது குறிப் பிடத்தக்கது.