தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில முன்னாள் துணை செயலாளரும், ஒன்றுபட்ட திருச்சி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆசிரியர் கே.எஸ். பிச்சுமணி (86). இவர் தனது பிறந்தநாளையொட்டி சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூபாய் ஆயிரத்தை, சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினார். அவருக்கு சிஐடியு கரூர் மாவட்டக் குழு வாழ்த்து தெரிவித்தது. சங்க மாவட்ட துணைச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், பொருளாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.