districts

img

மேல்முறையீடு செய்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல்

திருச்சிராப்பள்ளி, நவ.10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெள்ளியன்று நடைபெற்ற விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி கூட்ட அரங்கில், பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கந்தர்வகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினர். நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 17 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.