மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இளங்கலை மற்றும் அறிவியல், முதுகலை அறிவியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் உள்ளிட்ட 685 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.சுகுமார், கல்லூரியின் காசாளர் பொறியாளர் தியாகராஜன், கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கினர்.