அறந்தாங்கி, பிப்.17- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோ வில் அரசு மேல்நிலைப் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவி செ.தீபிகா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவி செ.தீபிகாவிற்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையையும் சான்றி தழையும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் வழங்கினார். மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா உள்ளிட் டோர் வாழ்த்து தெரிவித்தனர்.