districts

கூர் நோக்கு இல்லங்கள் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் ஆணைய உறுப்பினர் அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி,ஏப்,8, திருச்சி கீழப்புலிவார்டு ரோட்டில் உள்ள அரசு கூர்  நோக்கு இல்லத்தில், தேசிய  குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையத்தின் உறுப் பினர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாருடன் வெள்ளியன்று ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘கூர்நோக்கு இல்லங்களில்  போதை பொருள் பயன்பாடு, ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட தவறான செயல்கள் நடை பெறுவதாக கிடைத்த தகவல் களின் பேரில் ஆய்வு செய் யப்பட்டு வருகிறது.  திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் மாவட்ட நிர்வா கம் சரியாக பராமரித்து வரு கிறது. திருச்சி கூர்நோக்கு  இல்லத்தில் அரியலூர், பெரம் பலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நான்கு மாவட்ட சிறுவர்கள் தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணை யத்துக்கு தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு அளிக் கிறது. கூர்நோக்கு இல்லங்க ளில் இருந்து சிறுவர்கள் தப்பிச்செல்வது துரதிஷ்ட வசமானது. அதனால், தமிழ் நாடு அரசு இந்த இல்லங்கள்  மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஏற் படும் பாதிப்புகள் மற்றும்  புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற் கொள்ள திருச்சியில் அமர்வு குழு அமைக்கப்படும். இத னால் 2 லட்சம் குடும்பங்கள்  பயன்பெறும். குழந்தை களுக்கு எதிரான குற்றங் களில் ஈடுபடுபவர்கள் மீது  சட்டரீதியான நடவடிக்கை எடுத்தால் தான் பலரும்  மீண்டும் அந்த குற்றங்கள் செய்ய தயங்கி திருந்து வார்கள்’’ என்றார்.