districts

img

பாபநாசம் - அரியலூர் இடையே அரசுப் பேருந்து சேவை துவக்கம்

பாபநாசம், மார்ச் 3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - அரியலூர் (ரயில்  நிலையம் வரை) இடையே யான அரசுப் பேருந்து சேவை துவக்க விழா நடை பெற்றது. பாபநாசம் - அரியலூர் இடையே அரசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாப நாசம் வணிகர் சங்கம், ரயில்  பயணிகள் சங்கம், பொது மக்கள் எழுப்பி வந்தனர். பாப நாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, இக்கோரிக் கையை தமிழக சட்ட மன்றத்தில் முன்னெடுத்தார். தீக்கதிர் நாளிதழில் இது தொடர்பான செய்தி வந்தது.  இதையடுத்து ஞாயி றன்று பாபநாசம் - அரிய லூர் இடையேயான அரசுப் பேருந்து சேவையை காலை  7.30 மணியளவில், பாப நாசம் எம்.எல்.ஏ., ஜவாஹி ருல்லா தொடங்கி வைத்தார்.  இதில் எம்.பி-க்கள் கல்யாண சுந்தரம், இராமலிங்கம், பாப நாசம் பேரூராட்சித் தலை வர் பூங்குழலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்து காலை 7.30 மணிக்கு பாபநாசத்தில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு அரியலூர் (ரயில் நிலையம் வரை) சென்று சேரும். பிறகு, மாலை 3.30 மணிக்கு பாபநாசத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு அரியலூர் (ரயில் நிலையம் வரை) சென்று சேரும். இந்த பேருந்து சேவை, காலை 10 மணிக்கு அரிய லூர் - சென்னை வைகை அதிவிரைவு ரயிலில் (12636) சென்னை செல்லவும், மறு மார்க்கத்தில் மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து அரியலூர் வரும்  வைகை அதிவிரைவு(12635) ரயிலில் பயணம் மேற்கொள் ளும் ரயில் பயணிகள் பாப நாசம், கும்பகோணம் பகுதி களுக்கு வந்து சேர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதேபோன்று பாப நாசத்திலிருந்து சென்னை, மன்னார்குடிக்கு பேருந்து  சேவையை இயக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.