districts

img

ஆளுநர் விருது தேர்வு முகாம் தலைவியாக பணியாற்றிய ஆசிரியைக்கு பாராட்டு

மயிலாடுதுறை, மார்ச் 27-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஸ்ரீகண்ட புரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கணித  ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கலைமதி. நல்லாசிரியர் விருதுப் பெற்றவரான இவர், மாவட்ட சாரண, சாரணிய பயிற்சி ஆணையராகவும் செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் கல்வி மாவட்ட சாரண, சாரணி யர்களுக்கான ஆளுநர் விருது தேர்வு முகாம் பேரளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  முகாமில் திருவாரூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த சாரண, சாரணியர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில், ஆசிரி யர் கலைமதி முகாம் தலைவியாக செயல்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி அளித்து மாணவிகளை ஆளுநர் விருது பெற தேர்வு செய்தார்.  முகாம் தலைவியாக செயல் பட்ட ஆசிரியர் கலைமதியை, தலைமையாசிரியர் மதிவாணன், நக்கம்பாடி ஊராட்சி மன்ற தலை வர் வெண்ணிலா ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வர் முகமது இக்பால், துணைத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

;