திருச்சிராப்பள்ளி, மே 15-
தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணி கள் மேற்கொள்வதற்கு 2016-17ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் உருவாக்குதல், கழிவறை வசதி அமைத்தல் ஆகிய கூடுதல் பணிமேற்கொள்ளவும், கட்டடத்தின் வய திற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தி லிருந்து ரூ.2லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய தேவாலயம் பதிவு செய்தநாள், பதிவு எண். பதிவு அலுவ லகத்தின் முகவரி, தேவாலய கட்டடம் அமைய பெற்ற பகுதியின் வட்டம், கிராமம், நில வகை பாடு, கட்டடம் அமைந்துள்ள நிலத்தின் மொத்த விஸ்தீர்ணம், கட்டட விஸ்தீர்ணம், தேவாலய கட்டடம் கட்டப்பட்ட நாள் மற்றும் வயது, ஒப்புதல் பெற்ற கட்டட வரைபட நகல் உரிய படிவங்களில் பெறப்பட்ட தேவாலய கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, எவ்வகையான பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேவாலய சேதமடைந்த பகுதியின் தற்போதைய நிழற்படம், உத்தேச மதிப்பீடு, தேவாலயம் சுயாதீனம் வகையாக இருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்ற சான்று ஆகிய விபரங்களுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலஅலுவலரை தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.