districts

img

அரசே பென்சனை ஏற்று நடத்த வேண்டும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, பிப்.27- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர்  நல அமைப்பு மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி வெண்  மணி இல்லத்தில் திங்களன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன்  தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலா ளர்கள் வீரராகவன், செல்வராஜ், சண்முகம், மாநில பொதுச்செயலாளர் கே.ஹர்ஷன், மாநில பொருளாளர் ஏ.வரதராஜன், மாநில, மைய செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில், அரசே பென்ஷனை ஏற்று நடத்த வேண்டும், 2020க்கு பிறகு வழங்கப்படாமல் உள்ள பணப்பயன்கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும், 89 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அக விலைப் படியை உடனே வழங்க வேண்டும், மாநில மாநாட்டை மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.