districts

img

இடிந்து விழும் நிலையில் அரசு அலுவலகங்கள்

முதுகுளத்தூர், மே 3-

   இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அமைந்துள்ள வட்டார நூலகம், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம், அஞ்சல் துறை அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன.

   மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மையம், சிறைச்சாலை   அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகம் ஆகிய அலுவலக கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் நிலை உள்ளன.  அலுவலகத்திற்கு செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு முதுகுளத்தூரில்  புறம்போக்கு நிலத்தில் அரசு அலுவலக கட்டிடங்களை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.