ஒட்டன்சத்திரம், ஜன.9- வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்தி லேயே பலியானார். மேலும் 2 மாண வர்கள் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக் கன்பட்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் எலக்ட்ரீ சியன் படித்து வருபவர்கள் புது அழகாபுரியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் கோகுலகிருஷ்ணன் (18), பாலபட்டி யைச் சேர்ந்த ஞானசேகர் மகன் தருண் (18), சாமிமுத் தன்பட்டியைச் சேர்ந்த எட்வின் சகாயராஜ் (18). இவர் கள் மூவரும் வியாழனன்று ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வேடசந்தூர் - திண்டுக்கல் சாலையில் நாகம்பட்டி மாசம்மாள் மல்லம்மாள் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற வேனை முந்து வதற்காக சாலையின் நடுவே சென்றுள்ளனர். அப்பொழுது எதிரே போடியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் கல்லூரி மாணவர் கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மாணவர்கள் எட்வின் சகாயராஜ் மற்றும் தருண் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச் சைக்காக இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.