தூத்துக்குடி, ஜூன் 25-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டய புரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
மதுரை, தேனி, இராமநாத புரம், சிவகங்கை, திருநெல் வேலி, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்குவந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல் கின்றனர். ஜூன் 29 அன்று பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த ஆட்டுச்சந்தை யில் வியா பாரம் களை கட்டியது. சனிக் கிழமை அதிகாலை முதல் விற்பனை சூடுபிடிக்கத் தொ டங்கியது. வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பல தரப்பட்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்ப னைக்கு கொண்டு வரப்பட்டன.
ரூ.6 கோடிக்கு விற்பனை நடை பெற்றதாக வியாபாரிகள் தெரி வித்தனர்.