districts

img

நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் ஆவேச போராட்டம்

தஞ்சாவூர், நவ.3 -  நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக வழங்கப்படா மல் நிலுவையில் உள்ள கூலியை தீபாவளி பண்டிகைக்கு முன்னரே உடனடியாக வழங்க வேண்டும். ஜாப் கார்டு வைத்துள்ள அனை வருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து, திட்டத்தை சீர் குலைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் நவம்பர்  3 வெள்ளியன்று அம்மாபேட்டை, கொள்ளிடம், ஒரத்தநாட்டில் நூறுநாள் வேலைத்திட்ட தொழி லாளர்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியத் தலைவர்  வி.ரவி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பக்கிரி சாமி, மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட 360 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை பெற்றார். விரைவில் கூலியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  

கொள்ளிடம்  மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கொள்ளிடம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.முன்னதாக 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு கொள்ளிடம் பேருந்துநிறுத்தம் அருகிலிருந்து பேரணியாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரத்தநாடு  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாடு பேருந்து நிலையத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆயிரக் கணக்கான பெண்கள் ஊர்வல மாகச் சென்று, ஒரத்தநாடு ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆம்பல் துரை.ஏசு ராஜா ஆகியோர் உரையாற்றினர்.  இதில், ஒன்றியக் குழு உறுப் பினர்கள் மற்றும்  100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.