districts

img

முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா ஊக்க தொகை வழங்கிடுக

மயிலாடுதுறை, ஜூன் 19-

    மயிலாடுதுறையில் ஊரகவளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்டப் பேரவை மாவட்டத் தலைவர் ப.மாரியப்பன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது.  

    மாவட்ட துணைத்தலைவர் அ.வில்சன் வர வேற்றார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர். ராமானுஜம் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலா ளர் சி.பாலையா, சிஐடியு மாவட்டத் தலைவர் ரெ. ரவீந்திரன், மாவட்டப் பொருளாளர் எம்.கலைச் செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம் உரையாற்றினார்.  

   பேரவையில், தலைவராக சி.பாலையா, செய லாளராக எம்.சேகர், பொருளாளராக மனோகர் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு பேரவை யில் தேர்வு செய்யப்பட்டது.

   பேரவையில், முன்கள பணியாளர்களுக்கு அறிவிக்கபட்ட கொரோனா ஊக்க தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், தூய்மை காவ லர்களுக்கு அறிவிக்கபட்ட ஊதிய உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும், உள்ளாட்சி ஊழி யர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி  பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.