சீர்காழி, மார்ச் 22 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டு பகுதியாக உள்ள கிராமம் நாதல்படுகை. இங்கு சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் வசித்து வருகின்றனர். காலங்காலமாக இங்கு வசித்து வரும் இவர்கள், இந்தத் திட்டு பகுதியிலுள்ள செழுமையான நிலப்பகுதி யில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை வளப்ப டுத்தி வருகின்றனர். இங்கு நெல் உளுந்து, பயறு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்களும் கத்தரி, வெண்டை, தக்காளி, மிள காய் உள்ளிட்ட தோட்ட பயிர் களையும் மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி, காக்கட் டான், செண்டுபூ உள்ளிட்ட பூச் செடிகளையும் பயிரிட்டு வரு கின்றனர். இந்நிலையில் வருடந் தோறும் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் இங்கு தொ டர்ந்து பெரியளவில் ராட்சத பள்ளம் தோண்டி, ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி மண் எடுத்து அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தி வரு கின்றனர். செங்கல் சூளை களுக்காக குடியிருப்பை ஒட்டியும் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிற கரையை ஒட்டியுள்ள பகுதியி லும் பெரிய பள்ளங்களை தோண்டியுள்ளனர். இப்படி மண் எடுக்கப் பட்ட பள்ளமான பகுதிகள் புதி தாக வெட்டப்பட்ட பெரிய குளங்கள் போலவும், நீரோ டைகள் போலவும் உள்ளன. மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து கொள்ளி டம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகையில், வடி கால் வாய்க்கால்களில் உள்ள தண்ணீர் ஆற்றுப் பகு திக்கு அதிகளவில் வெளி யேற்றப்படுகின்றன. அப்போது கொள்ளிடம் ஆற் றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நாதல்படுகை கிராமத்திற்குள் நுழையும் தண்ணீர் படிப்படியாக பெரிய பள்ளங்களில் புகுந்து குடியிருப்புகளையும் சூழ்ந்து விடுகிறது.
இந்நிலையில் வரு டந்தோறும் அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் அதிக தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டால், நாதல்படுகை கிராமத்தில் உள்ளவர்கள் ஆற்றங்கரைக்கு அப்பால் அழைத்து வரப்பட்டு தற்காலி கமாக அமைக்கப்படும் நிவா ரண முகாம்களில் தங்க வைக் கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நாதல்படுகை கிராமத்தில் பல இடங்களில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளதால், திட்டு பகுதியாக உள்ள இக்கிராமத்தின் பரப்பளவு சுமார் 1 கி.மீட்டர் சுற்றள வுக்கு ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. பல வீடுகளும் தண்ணீருக்குள் சென்று விட்டன. கடந்த மழை வெள்ளத் தின் போதுகூட ஆற்றின் கரை பாதுகாப்புக்காக கட்டப் பட்டிருந்த கிரயான் என்ற தடுப்புச் சுவரும் உடைந்து தண்ணீருக்குள் சென்று விட்டது. தொடர்ந்து வரு டந்தோறும் மழைக் காலங்க ளில் இந்நிலை நீடித்து கொண்டிருப்பதால், நாதல் படுகை கிராமமே தண்ணீரில் அடித்துச் செல்லும் அபாய கட்டத்தில் உள்ளது. அனு மதியின்றி இங்கு பல செங்கல் சூளைகளுக்காக மண் எடுக் கப்படுவதால் தற்போது இந்த கிராமம் சில வருடங்க ளில் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுனர் களும், பொறியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டு கிராமத்தை தொ டர்ந்து பாதுகாக்க, பள்ளம் தோண்டி மண் எடுப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள மக்க ளுக்கு வேறு இடத்தில் நிரந்த ரமாக வீடு கட்டி குடியேறு வதற்கு வாய்ப்புகள் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை விடுத்துள்ள னர்.