districts

img

ஜெனிவா ஒப்பந்த தின விழா பேரணி ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்

திருவாரூர், ஆக.22 -  

       இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டக் கிளை, ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் யூத்  ரெட்கிராஸ் இணைந்து நடத்தும் ஜெனிவா ஒப்பந்த தின விழா பேரணி திருவாரூர் புதிய ரயில் நிலை யத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

    ரெட் கிராஸ் இயக்கம் என்பது ஓர் அகில உலக  சேவை அமைப்பாகும். போர்க் காலத்தில் காய முற்றோருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவு வதற்காக இது உருவாக்கப்பட்டது. நாளடைவில் பேரிடர் காலங்களிலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி புரிந்து வருகிறது.  

    ரெட் கிராஸ் இயக்கம் ஏழு அடிப்படை கொள்கை களை கொண்டு செயல்படுகிறது. ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனிதநேய சட்டங்கள் 1949 ஆம் ஆண்டு ஆக.12 அன்று, 200 உலக நாடுகள் கையெழுத்திட்ட ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றன. உலக நாடுகளில் உள்ள அனைத்து ரெட்  கிராஸ் சங்கங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆக.12 ஆம் நாளை ஜெனிவா ஒப்பந்த தினமாக கொண்டாடி வருகின்றன.

    அதன்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டக் கிளையின் சார்பாக பள்ளி, ஜே.ஆர்.சி மற்றும் கல்லூரி ஒய்.ஆர்.சி மாணவ, மாணவிகள் சுமார் 800 பேர் பங்கேற்ற ஜெனிவா ஒப்பந்த தின பேரணி நடைபெற்றது. இப்பேரணி ரயில் நிலையத்திலிருந்து பனகல் சாலை மற்றும்  தெற்கு வீதி வழியாக வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

     நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டாட்சி யர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள் ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள் கலந்து கொண்டனர்.