தஞ்சாவூர், பிப்.20- மதுரை-திருச்சி, திருச்சி-தஞ்சாவூர் ரயில் பாதையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். அப்போது திருச்சி - தஞ்சாவூர் இடையே 100 கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரித்து 120 கி.மீட்ட ரில் செல்லும் வகையில் ரயில் பாதையின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கோட்ட மேலாளர்கள் மனீஷ்அகர்வால் (திருச்சி), ஆனந்த் (மதுரை), முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் திங்கள்கிழமை மதியம் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்த பொதுமேலாளரை, நிலைய மேலாளர் ஜெ.சம்பத்குமார் வரவேற்றார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் பொதுமேலாளர் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர் பெரிய கோயில், கல்லணை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஸ்ரீரங்கம் வழியாக சென்னை சென்றார்.
கூடுதல் வசதிகள் கேட்டு மனு தஞ்சாவூர் வந்த பொதுமேலாளரிடம், தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பா ளர் சங்க செயலாளர் ஏ.கிரி, பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சர வணன், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணி கள் நலச்சங்கத் தலைவர் என்.ஜெயராமன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுவில், ‘‘திருச்சி- சென்னைக்கு மெயின் லைனில் இண்டர்சிட்டி எக்ஸ்பி ரஸ் அறிமுகப்படுத்த வேண்டும். திருச்சி- மும்பை மெயின் லைனில் புதிய ரயில் இயக்க வேண்டும். இராமேஸ்வரம்-திருப் பதி விரைவு ரயிலை தினமும் இயக்க வேண்டும். தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே இருவழி அகல ரயில்பாதைக்கு அனுமதி வழங்க வேண்டும். தஞ்சாவூர், கும்பகோணத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும். புதுதில்லி-சென்னை ஃகரிப்ரத் விரைவு ரயிலை மெயின் லைனில் திருச்சி வரை நீட்டிக்க வேண்டும். மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயிலை பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நட வடிக்கை வேண்டும். தாம்பரம்- தூத்துக் குடிக்கு இயக்கப்பட்ட ஜனதா ரயிலை மீண்டும் மெயின் லைனி்ல் இயக்க வேண்டும். திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் போதியளவு கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண் டும். செகந்திராபாத்- இராமேஸ்வரம் வாரா ந்திர ரயிலை தாம்பரம், முத்துப்பேட்டை, பேராவூரணியில் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட் டுள்ளது.