districts

img

பொது முடக்கம் நெல் கொள்முதல் காத்துக் கிடக்கும் அவல நிலை

பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையை அடுத்த அருந்தவபுரம் உள்ளிட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பொங்கலுக்கு முன்பிருந்தே விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து காத்துக் கிடந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை.  ஞாயிறன்று பொது முடக்கம் என்பதால் தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லுடன் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

;