districts

img

தஞ்சாவூரில் பொதுத் தேர்தல் செலவினக் கணக்கு ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.10-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி தேர்தல்  செலவின கணக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாநில அளவிலான  சிறப்பு தேர்தல் செலவின பார்வையா ளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை யில், தேர்தல் செலவின பார்வையா ளர் ஜான்வி திவாரி, தேர்தல் நடத்தும்  அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலை யில் புதன்கிழமை நடைபெற்றது. மக்களவை பொதுத்தேர்தலுக்கு தமிழ்நாட்டிற்கு மாநில அளவிலான சிறப்பு தேர்தல் செலவின பார்வை யாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியம னம் செய்யப்பட்டுள்ளார். இவர், தற்போது மாநிலம் முழுவதும் தேர்தல்  செலவின கணக்குகள் தொடர்பான ஆய்வு பயணத்தை மேற்கொண்டு வரு கிறார். அதனையொட்டி, தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு  மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரவீனா குமாரி மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.