தஞ்சாவூர், டிச.15 - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிஐடியு மற்றும் சிபிஎம் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வரும் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்தத் தலை வருமான தோழர் பி.ராமமூர்த்தி யின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 15 வெள்ளியன்று தமிழகம் முழுவதும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் அனுசரிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங் களில் அவரது உருவப்படத் திற்கு மாலையணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர். கட்சியின் தஞ்சாவூர் மாநகரக் குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். சேதுபாவா சத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி கிளைகள் சார்பிலும் தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக பணிமனை உட்பட பல்வேறு மையங்களில் நடை பெற்றது.
திருவாரூர்
கட்சியின் குடவாசல் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். நாகை வடக்கு ஒன்றியம் செல்லூர், ஐய்யவநல்லூர் ஊராட்சி, தலைஞாயிறு ஒன்றியம் அய்யூர் ஊராட்சியிலும் நடை பெற்றது.
கட்சியில் இணைந்த 6 குடும்பங்கள்
கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்காலத்தூர் கிளை யில் நடைபெற்ற அஞ்சலி நிகழ் வில், பல்வேறு கட்சிகளை சார்ந்த ஆறு குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த னர். கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். அபுபக்கர், கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். கிளைச் செயலாளர் ஜெ. நாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், ஆக்கூர் பகுதி களில் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின பேரவைகள் நடை பெற்றன. தரங்கம்பாடி ஒன்றியம், திருக்கடையூரில் ஒன்றிய செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரவையில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.சிம்சன்,ஜி.வெண்ணிலா ஆகியோர் உரையாற்றினர். ஆக்கூரில் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடை பெற்ற பேரவையில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணகி, வீ.எம்.சரவணன் ஆகியோர் பேசினர்.
கந்தர்வகோட்டையில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா படத்திறப்பு
புதுக்கோட்டை, டிச.15:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தியின் நூற்றாண்டு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவின் படத்திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. தோழர்கள் பி. ராமமூர்த்தி, என்.சங்கரய்யா ஆகியோரின் உருவப்படங்களைத் திறந்து வைத்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை புகழஞ்சலி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பால சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.