பெரம்பலூர், டிச.9 - கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கேங் மேன் பணியாளர்கள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்ய அனுமதி வழங்க வேண்டும். கட்டுமானப் பணிகள், புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். மின் தடை நீக்குதல் மற்றும் அலுவலக பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வரும் கேங்மேன் பணியாளர் களை கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும். மின்சாரம் உள்ள மின் பாதையில் கேங் மேன் பணியாளர்களை பணியாற்ற நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். விருப்ப இடமாறுதல் உத்த ரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்ப லூர் மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்ட மண்டல செய லாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித் தார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் கொடுத்தனர். இதில் 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.