districts

விநாயகர் விழாவும் நீர்நிலைகளும்!

காரைக்குடி, செப்.19- ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடப்படும். இந்தாண்டு புரட்டாசி முதல் நாள்  கொண்டாடப்பட்டது. இந்த விழா வில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வீடுகளில் பூஜை  செய்யப்பட்டு பின்னர் மூன்று நாட்க ளுக்கு பிறகு ஆறுகளில் அல்லது ஏரிகளில் கரைக்கப்படும். இதனால்  ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்  பது குறித்து அறிவியல்பூர்வ கருத்  துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்  டார் காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி புவியமைப்பியல் துறைத் தலைவரும் இணைப்  பேராசியருமான ப.உதயகணே சன். விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து கடலிலோ அல்லது ஏரி, குளங்களிலோ கரைக்கப்படும் களிமண் பல்வேறு நிலைகளுக்கு உள்ளாகிறது. இதில் ஆற்றில் கரைக்கப்படும் களிமண், ஆற்றில்  அடித்துச் செல்லப்பட்டு பரவலாக எல்லா இடத்திலும் பரவி நிற்கும்.  அது ஒரே இடத்தில் தங்காது, ஏனெ னில், மண் துகள்களில் மிகவும் நுண்ணியது களிமண். ஆற்றில் நீரில்லாத காரணத்தாலும் வீடு களுக்கு அருகில் ஆறு இல்லாத  காரணத்தினாலும் மக்கள் அருகிலி ருக்கும் நீர் நிலைகளான ஏரிகள்,  குளங்கள் ஆகியவற்றில் களிமண் ணால் ஆன பிள்ளையாரைக் கரைக்கிறார்கள். ஏரி, குளங்களில் கரைத்தால் என்ன ஆகும்? ஒரே நேரத்தில் பலரும் ஏரி, குளங்களில் களிமண்ணால் ஆன  பிள்ளையாரை கரைக்கும் பொழுது அந்த களிமண் ஆற்றைப்  போல் அடித்துச் செல்லாமல் குளங்களின் அடியில் அப்ப டியே தங்கிவிடும். இவ்வாறு வரு டக்கணக்கில் குளத்தின் அடியில் படியும் களிமண் வெளியேற வாய்ப்பு மிகக்குறைவு. இதனால் அந்த நீர்நிலைகளின் நீரின் கொள் ளளவு குறையக்கூடும். ஆனால் அங்கு வாழும் உயிரினத்திற்கு எவ்வித ஆபத்தும் இருக்காது. நீரின் கொள்ளளவு குறை வதைத் தடுக்கத்தான் கிராமப் பகுதிகளில் ஏரி குளம் தூர் வாரும் வேலை அடிக்கடி நடைபெறும். அப்போது அடியில் கிடக்கும் வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை அப்புறப்படுத்தி நீரின் கொள்ளளவை அதிகப் படுத்துவர்.  களிமண்ணில் தயாரிக்கப் படும் பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைப்பதை விட  செடி வளர்க்கும்  தொட்டியை வாங்கி களிமண்ணில் பயனுள்ள விதைகளை நட்டு வளர்த்தால் வீட்டிற்கு அதன் மூலம் கிடைக்கும் விளைபொருட்கள் பலனளிக்கும். ஆண்டிற்கு ஒரு முறை இப்படிச் செய்தால் மூன்று  முதல் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு  குடும்பத்தினரும் வீட்டில் ஒரு  தோட்டத்தையே அமைத்துவிட லாம். திருவிழா காலங்களில் பயன் படுத்தப்படும் பூக்கள்,

மாலை போன்றவற்றை குழிகளில் இட்டு உரங்களாக மாற்றலாம். களிமண்ணைப் பயன்படுத்து வதற்குப் பதில் அரிசி மாவு, கிழங்கு  மாவில் பிள்ளையாரை வடிவ மைக்கலாம். இவற்றை நீர்நிலை களில் கரைத்தால் இதை உண்டு உயிரினங்கள் உயிர்வாழும். உதாரணத்திற்கு, ஒரு வீட்டில் துக்கநிகழ்வு நடந்துவிட்டால், ஈமக்கிரியை நடத்துவார்கள். அன்  றைய தினம் அரிசி, எள் ஆகிய வற்றைக் கலந்து பிண்டம் உரு வாக்குவர். பின்னர் அதை நீர் நிலை களில் தான் கரைக்க வேண்டுமென அறிவுறுத்துவர். அதன்படியே மக்களும் செய்கின்றனர். நீர்நிலை யில் அரிசி, எள் இவற்றைக் கரைத்  தால் மீன் உள்ளிட்ட உயிரினங்க ளுக்கு இது உணவாகும். சுற்றுச் சூழலும் பாதிக்கப்படாது. இது விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறை. பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களால் சிலைகள்  செய்து அதை நீர் நிலைகளில் கரைக்கும் பொழுது அங்கு வாழும்  உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்பது சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள ஒரு இரசாயனப் பொடி. இதில் சிலைகளைச் செய்து ஆற்றில் கலப்பதால் நீர்  நிலைகளில் சுண்ணாம்பு சத்து அதி கரிக்கக்கூடும். நீரின் காரத்தன்மை அதிகரிக்கும் பொழுது அந்த நீரில்  வாழும் மீன்கள் போன்ற உயிரி னங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.