கும்பகோணம், அக்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் ஒன்றிய இடைக்கால பரி சீலனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலமேகம், அருள ரசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி பழனி வேல் நாகராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், கட்சியின் கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக கணேசன் தேர்வு செய்யப்பட்டார். திருப்புரம்பியம் பகுதியில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் ஏராளமானோர் விண்ணப்பித்து, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவர்களுக்கான இடம் வழங்கப்படவில்லை. மேலும் பயனாளர்கள் தேர்வு முறைப்படுத் தப்படாமல் உள்ளது. அந்த இடத்தை தகுதியான பயனாளர் களுக்கு குடிமனைப் பட்டாவுடன் உடனடியாக வழங்க வேண்டும். கும்பகோணம் புறவழிச்சாலையில் இருந்து அசூர், மதனத்தூர் வரை உள்ள குறுகிய சாலையை போக்குவரத்து இடையூறின்றி விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.