மயிலாடுதுறை,அக்.19- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகில் பொது சுகாதாரம் வளாகம் வியாழனன்று திறக்கப்பட்டது. விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி தலைமை வகித்தார், துணைத் தலைவர் பொன். ராஜேந்தி ரன், திமுக நகரச் செயலாளர் முத்துராஜா, மாவட்ட பிரதிநிதி சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலகண்ணன் வரவேற்றார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்து பேசினார்.இதில் சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணி யாளர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.