districts

பெண்ணின் வயிற்றில் இருந்து 5கிலோ எடை புற்றுநோய் கட்டி அகற்றம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர், ஜூன் 20-  

     பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார்  5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை,  அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பட்டுக்  கோட்டை அரசு மருத்துவமனை மருத்து வர்கள் சாதனை படைத்துள்ளனர்.  

   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்துக் கண்ணு. இவரது மனைவி ராஜம்மாள் (65).  இவர் கடந்த 3 மாதமாக தீவிர வயிற்று வலி யால் அவதிப்பட்டு வந்தார்.  

    இந்நிலையில், அவர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பட்டுக்கோட்டை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்  கொள்ளப்பட்டதில், அவரது சினைப்பை யில், புற்றுநோய் கட்டி இருப்பது கண்ட றியப்பட்டது.

    ராஜம்மாள் ஆரோக்கியமற்ற நிலை யில் இருந்ததாலும், அவருக்கு போதிய ரத்தம் இல்லாமலும், ஜுரம் இருந்த கார ணத்தினாலும், 10 நாட்கள் மருத்துவக் கண்  காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில், அவருடைய வயிற்று வலி, காய்ச்சல் குறைந்த பிறகு கடந்த மூன்றாம் தேதி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் அன்பழகன் தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா வெங்கடேஷ், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், மகப்பேறு மருத்துவர்  மீனா, மயக்க மருந்து நிபுணர் சுதாகர் மற் றும் குழுவினர், ராஜம்மாளுக்கு அறுவை  சிகிச்சை செய்து, கர்ப்பப்பை மற்றும் வயிற்  றில் இருந்த சுமார் 5 கிலோ எடையுள்ள கட்டி யை அகற்றினர்.

   மேலும், புற்றுநோய் பரவியிருக்க வாய்ப்புள்ள நிணநீர் முடிச்சுகள், அசுத்த நீர் எடுக்கப்பட்டு, பகுப்பாய்விற்காக தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவுகளில், புற்று நோய் செல்கள் சினைப்பையில் மட்டும் இருந்ததையும், மற்ற உறுப்புகளுக்கு பர வாமல் இருப்பதும் உறுதி செய்யப் பட்டது.

    அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளி ராஜம்மாள் தீவிர கண்கா ணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு, உடல்நிலை  சீரானதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறு கையில், “அறுவை சி‌கி‌ச்சைக்கு பிறகு ராஜம்மாள் நலமுடன் உள்ளார். வரும் நாட்களில் புற்றுநோயின் தாக்கம், மற்ற எந்த உறுப்புகளிலும் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்” எனத் தெரிவித்தனர்.