பெரம்பலூர், ஆக.1-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் சதாசிவம்.
இவர் மீது பூலாம்பாடி தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரிந்த யுகபாரதி என்பவர், பணி செய்ய விடாமல் தடுத்த தாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்து வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு வேப்பந்தட்டை குற்ற வியல் நடுவர் மற்றும் உரிமையியல் நீதி மன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் தோழர் சதாசிவத்திற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான இரா.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர் அரு ணன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் 31.7.2023 அன்று தீர்ப்பு வழங் கப்பட்டது. இதில், சதாசிவம் குற்றமற்றவர் (நிரபராதி) எனக் கூறி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் விடுதலை யான சதாசிவம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழை- எளிய மக்களுக்காகவும், ஜனநாயக இயக் கங்களுக்காகவும் ஆஜராகி, வெற்றி தேடித் தந்த வழக்கறிஞர்கள் இரா.ஸ்டா லின், அருணன் ஆகியோரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.