கும்பகோணம், ஜூன் 14-
தஞ்வாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின்படி தனிப் படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய வேட்டையில், தொடர் திருட்டில் ஈடுபட்ட பந்தநல்லூர் சாய்னாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி, விக்னேஷ் ஆகியோரிடமிருந்து சுமார் 7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன.
இதேபோல், கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதி யில் திருட்டில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஆசைகுமாரிடம் 5 பவுன் நகைகள் கைப்பற்றப் பட்டன. இதனையடுத்து கொள்ளையர்கள் மூவரை யும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.