செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்து
சாத்தம்பாடியில் சாலை மறியல்
அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாத்தம்பாடி அருகே செம்மண் குவாரி செயல்படுவதாக கூறப்படுகிறது. இங்கிருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் செம்மண்ணை ஏற்றிக் கொண்டு செல்வதாக தெரிகிறது.
அதிக அளவில் செம்மண் லாரிகள் இயக்கப்படு வதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சாத்தம்பாடி அரசுப் பள்ளி அருகே செம்மண் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஆட்டுக்குட்டி ஒன்று, உடல் நசுங்கி இறந்தது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாத்தம்பாடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகள் பர்மிட் இல்லாமல் செல்வ தாகவும், நாள்தோறும் உயிர் பலிகள் ஏற்படுவதாகும் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் தகவ லறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்
தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
ஒரத்தநாடு பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, ஒரத்தநாடு பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடம், பொதுக் கழிப்பி டங்கள் மிகவும் அசுத்தமாகவும், கட்டண விகிதங்கள் குறிப்பிடப்படாமலும், ஆர்.வி.நகர் பூங்காவில் புற்கள் வளர்ந்து அசுத்தமாகவும் இருந்தது.
விளையாட்டு உபகரணங்கள் மிகவும் துருப் பிடித்த நிலையில் இருந்தன. மேலும், பழுதுபட்ட உபகர ணங்களை உடனடியாகச் சீர் செய்து, பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தியும், அதை செயல் படுத்தாத ஒரத்தநாடு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆர்.செந்தில்குமரகுருவை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக் கிழமை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஜமாபந்தி: நலத்திட்ட உதவி வழங்கல்
பொன்னமராவதி, ஜூன் 22- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் பசலி 1433 மூன்று நாட்கள் நடைபெற்று குடிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ரம்யாதேவி தலைமை வகித்தார். கடந்த ஜூன் 19 அன்று காரையூர் பிர்கா விற்கும், ஜூன் 20 இல் அரசமலை பிர்க்காவிற்கும், ஜூன் 21 இல் பொன்னமராவதி பிர்க்காவிற்கும் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து 386 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மாலையில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் நில ஆய்வாளர் ஜெய்சங்கர், மாவட்ட வரு வாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரவணன், வட்டாட்சியர் சாந்தா ஆகியோர், 56 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி னர்.
ஹோட்டல் அதிபர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை
திருச்சிராப்பள்ளி, ஜுன் 22- திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி முதலியார் சந்து பகுதி யைச் சேர்ந்தவர் விக்கிரமராஜா (46). இவர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரு கிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சிய டைந்து, உள்ளே சென்று பார்த்த போது 6 பவுன் நெக்லஸ் ஒன்று, 2 பவுன் நெக்லஸ், 2 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் பிரேஸ்லெட், 2 சவரன் தங்கச் செயின், ஒரு பவுன் தங்க டாலர், 29 கிராம் கம்மல் செட்டு, 10 கிராம் தங்க மோதி ரங்கள் என 19 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந் தன. இதுகுறித்து விக்கிரமராஜா கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வா ளர் கோபால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்.
மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருச்சிராப்பள்ளி, ஜூன் 22- திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் கடை களில் பதுக்கி வைத்து தமிழக அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாநக ராட்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருச்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பொன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் தில்லை நகர் போலீசார் உதவியுடன் தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியிலுள்ள ஒரு மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மளிகை கடையில் 6 கிலோ எடையுள்ள கான்ஸ், 3 கிலோ எடையுள்ள கூலிப், ஒரு கிலோ எடையுள்ள பான் மசாலா என மொத்தம் 10 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் கடை வியாபாரி ராஜா முகமதுவை போலீசில் ஒப்படைத்தனர். தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜா முகமதுவை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது தில்லை நகர் காவல் நிலை யத்தில் இரண்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.30 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு: அரசுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
தஞ்சாவூர், ஜூன் 22- தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது, பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு, பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பி னரும், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா ளருமான கா.அண்ணாதுரை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வெள்ள காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பாசன நிலங் களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாகுவதை தடுக்கவும் சுமார் ரூ.30 கோடி மதிப் பீட்டில் பட்டுக்கோட்டை தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
அந்த வகையில், கரம்பயம் கிராமத்தில் வேத புரி ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடி மதிப்பீட்டில் தடுப் பணை, துவரமடை கிராமத் தில் நரியாற்றின் குறுக்கே ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு, தம்பிக்கோட்டை வட காடு கிராமத்தில், பழைய பாட்டுவநாச்சி புலிக்குத்தி வாரி மிகை நீர் வழிந்தோடி யினை மறுகட்டுமானம் செய்யும் பணி ரூ.8 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டிலும், கண்ணனாறு வடிகாலின் பாதைகள் (கீழக்குறிச்சி பெரியகோட்டை மற்றும் புளியங்குடி), ஈப்பு பாதை சீரமைப்பு மற்றும் முகப்பு களை புனரமைக்கும் பணி கள் ரூ.6 கோடியில் நடை பெற உள்ளன.
எனது கோரிக்கையை ஏற்று, வளர்ச்சிப் பணிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வழங்கிய, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகனுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப் பினர் கா.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
பாபநாசம்: பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூன் 22 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட் பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.
மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மத கரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபு ராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதி களிலிருந்து 677 விவசாயிகள் 94.7 மெ.டன் அளவு பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர். கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதேசம், தேனி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதி களைச் சார்ந்த 10 வணிகர்கள், அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7269, குறைந்த பட்சம் ரூ.5339, சராசரி ரூ.6489 என விலை நிர்ணயம் செய்தனர்.
பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.61 லட்சம். பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்ப னைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமை வகிக்க, மேற்பார்வையாளர் சிவா னந்த் முன்னிலை வகித்தார்.
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து குவிண்டாலுக்கு ரூ.9500, கருப்பு கவுனி நெல் குவிண்டாலுக்கு ரூ.9500, எள் குவிண்டாலுக்கு ரூ.13500, கொப் பரை குவிண்டாலுக்கு ரூ.8500 என்ற அதிக பட்ச விலைக்கு விற்பனையானது.
மணல் கடத்தும் கும்பலுடன் தொடர்பு:
ஒரே நாளில் 25 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம்
திருச்சி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜுன் 22 - திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணை யுடன் மணல் கடத்தல் நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி. வருண் குமாரின் தனிப்படை போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அதில், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் தவிர அனைவரும் நேரடியாக வும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்ப லோடு கைகோர்த்து செயல்படுவது தெரிய வந்தது.
பின்பு, அந்த உதவி ஆய்வாளர் தவிர புகாருக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வா ளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 25 பேரும் உடனடியாக மாவட்ட ஆயுதப் படைக்கு நேரடியாக சென்று ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து அனைவரும் ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர்.
சமயபுரம் காவல் நிலையத்தில் போலீ சார் கூண்டோடு மாற்றப்பட்டதால், ஆயுதப் படையில் இருந்து போலீசார் வரவழைக்கப் பட்டு, சமயபுரம் காவல் நிலையத்தில் பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.