காவிரி டெல்டாவின் கம்யூனிஸ்ட் தியாகிகளில் ஒருவரான சிவரா மனின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் ஜாம்பவானோடை கிராமமாகும். ஜாம்பவான்ஓடையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கீழக் காட்டை பூர்வீகமாகக் கொண்டவர்தான் தியாகி மலேயா கணபதி. மலேயா தொழிற்சங்க தலைவ ராகவும் இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரியாகவும் மலேயா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீரராகவும் பணியாற்றிய தியாகி மலேயா கணபதி 4.5.1949 கோலாலம்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை செய லாளர் தோழர் பழனிச்சாமி கூறும்போது, அமைதியாகத் தோற்றமளிக்கும் ஜாம்பவான் ஓடை புகழ்மிக்க வர்க்கப் போராட்ட வரலாறுகளோடு தொடர்புள்ளது. 1930-களில் இந்த கிராமத்திற்கு கவிஞர் கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் தனது தலை மறைவு வாழ்க்கையில் ஜாம்பவா னோடையின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ரெ.நாராய ணசாமி தேவர் வீட்டிற்கு அனேக முறை வந்து சென்று உள்ளார்.
செம்படை தியாகி சிவராமன் பிறந்து வாழ்ந்து போராடிய மண் ஜாம்பவானோடை கிராமமாகும். இங்குதான் மத நல்லி ணக்கத்திற்கு சான்றாக விளங்கும் ஜாம்பவான் ஓடை தர்கா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் கந்தூரி திருவிழாவில் சுமார் ஒரு லட்சம் மக்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு வருகிறார்கள். இந்தப் பகுதி முழுவதும் தென்னை, நெல், கடல் உணவு சுற்றுலா வணி கத்தையே நம்பி உள்ளது. முத்துப்பேட்டை பகுதியின் மக்கட்தொகையில் 78 சதவீதம் முஸ்லீம் மக்கள் வாழ்கின்ற னர். ஆனால் சோகம் என்னவென்றால் சரக்கு போக்கு வரத்தும் பயணிகள் போக்குவரத்தையும் அதிகம் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க முத்துப்பேட்டை ரயில் நிலையத்தின் தகுதியை பி கிரேடிலிருந்து டி-கிரேடாக மோடி அரசு தரமிறக்கி விட்டது. இந்த ரயில் நிலையத்தின் சிறப்பை குறைத் ததற்கான அருவருப்பான காரணம் மதவாதம்தான் என்று கூறினார்.
தியாகி நாவண்ணாவின் மூத்த புதல்வர் நா. ஜீவா னந்தம் (85) கூறும்போது, கவிஞர் ஜீவா தனது தலைமறைவு வாழ்க்கையில் எங்கள் வீட்டில் தங்கியுள்ளார். எனது தந்தை யார் நாராயணசாமி தேவர் 1938 இல் பிறந்த எனக்கு அவரது நினைவாகவே ஜீவானந்தம் என்று பெயரையும் சூட்டி னார். கம்யூனிஸ்ட் தியாகி சிவராமன், அப்பாவிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்று கூறினார்.
முன்னாள் விமானப்படை வீரரான ஜாம்பவானோடை நா.ராஜ்மோகன் கூறும்போது, திருவாரூர் மாவட்டத்திலேயே மிக அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட ஒரே கிராமம் ஜாம்பவான் ஓடை கிராமமாகும். ஜாம்பவான் ஓடை யில் மட்டும் 20 சுதந்திரப் போராட்ட வீரர்களின் விலா சங்களை மட்டும் தேடி கண்டுபிடிக்க முடிந்தது.
அதேபோல ஜாம்பவானோடையிலும் சுற்றுப்புற பகுதி களிலும் மக்கள் தொகையின் ஒப்பீட்டளவில் அதிகமான முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களை கொண்டதும் எங்கள் கிராமம் தான். சுதந்திரப் போராட்டங்களோடு கலை இலக்கி யம் அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் ஜாம்பவா னோடை முத்திரை பதித்தது என்றார்.
முத்துப்பேட்டை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான வி. கனகசுந்தரம் கூறும் போது, இந்தப் பகுதியின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஜாம்பவானோடை ரெ. நாராய ணசாமி தேவர் மகத்தானவர் என்று கூறலாம். 13.4.1930 வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், 1940 தனிநபர் சத்யா கிரகம் போன்ற எண்ணிறந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றிருந்த நாவண்ணா, 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார். அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வஉசி போன்றவர்களால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் இறுதிவரை இடதுசாரி சிந்தனையில் வாழ்ந்தார். மாபெரும் கம்யூனிஸ்ட் தலை வர்கள் ஏ.கே.கோபாலன், பி.சீனிவாசராவ், கவிஞர் ப.ஜீவா னந்தம் ஆகியோருடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்று கூறினார். - நீடா சுப்பையா