districts

img

எய்டு இந்தியா சார்பில் 10 குடும்பங்களுக்கு இலவச வீடுகள்

புதுக்கோட்டை, ஆக.7-

     பழங்குடியின மக்களுக்கு எய்டு  இந்தியா நிறுவனம் சார்பில் 10 வீடு கள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.  இதற்கான அடிக்கல்லை எம்.சின்ன துரை எம்எல்ஏ நாட்டினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் சிப்காட் காமராஜர் நகரில் பழங்குடியின  மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு  வசிக்கும் 10 பழங்குடியின குடும்பங்  களுக்கு தலா ரூ.2.5 லட்சம் மதிப்பில்  ரூ.25 லட்சத்தில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்  பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை அடிக்கல் நாட்டி பணிகளைத்  தொடங்கி வைத்தார். நிகழ்வில்  மேனாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் கே.சண்முகம், டி.சலோமி, எம்.ஜோஷி, தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.