தஞ்சாவூர், ஜூலை 15-
தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத் துவமனை, துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை, பல்கலைக்கழக துணைவேந் தர் வி.திருவள்ளுவன் தொடங்கி வைத்தார். டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவர்கள், துளசி பார்மசி பரிசோதகர்கள் கண் பரிசோதனை மேற் கொண்டனர். இம்முகாமில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத் தலைவர் கள், துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவல் நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.