பாபநாசம்,டிச.15- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டார ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் இலவச கண்புரை பரிந்துரை முகாம் நடைபெற்றது. துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் டாக்டர் கலை வாணி உத்தரவின் பேரில் திருவையாறு அருகே திரு வாலம்பொழில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் 28 பேருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்க் கொண்டு ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார்.