திருவாரூர், செப்.15 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பா.பிரபாகரன் தலைமை வகித்து, பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.முருகேசன், கல்விக் குழு உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் அணியின் மாவட்டச் செயலாளர் காசிராமன் மற்றும் குடவாசல் பேரூராட்சி தலைவர் மகாலெட்சுமி முருகேசன், துணைத் தலைவர் என்.குணசேகரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.