திருத்துறைப்பூண்டி, மார்ச் 18 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா திருக்களார் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் தமிழ்க்குடி பொதுநல அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்க்குடி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் நாக.அறிவழகன் தலைமை வகித்தார். முத்துப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ராஜா முகாமை துவக்கி வைத்து உரையாற்றினார். எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் சிறப்பு மருத்துவர் யு.சுரேஷ், இதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ப.லெனின், குழந்தை நல சிறப்பு மருத்துவர் ஜெ.ஜெயப்பிரகாஷ், பல் மருத்துவர் விவாகலெட்சுமி ஆகியோர் பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.