மயிலாடுதுறை, பிப்.12 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகே பொறையாரில் ரூ.1.89 லட்சம் செலவில் புதிய சார்பதிவா ளர் அலுவலக கட்டடம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா ஞாயி றன்று நடைபெற்றது. பொறையார் சார்பதிவாளர் அலு வலகத்தை தரங்கம்பாடி, ஆக்கூர், திருக்கடையூர், திருவிடைக்கழி, ஆயப் பாடி, தில்லையாடி, எடுத்துக்கட்டி சாத்தனூர், சந்திரபாடி, சின்னங்குடி, மருதம்பள்ளம் உள்ளிட்ட கிராமங் களில் பொதுமக்கள் நிலம் பத்திரப் பதிவு, திருமண பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பழமையான அந்த சார்பதி வாளர் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மழை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை யில் இருந்தது. இதனால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கட்டடம் கட்டு வதற்கு நிர்வாகம் மற்றும் நிதித்துறையின்கீழ் ரூ.1.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுணசங்கரி தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து பேசினார்.