தஞ்சாவூர், ஆக.27-
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத் தேவன் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.81 லட்சத்தில் 4 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டுவதற்காக, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமாரை கிராம மக்கள் அழைத்தனர். அப்போது அவர் அங்கிருந்த பள்ளி மாணவிகள் அட்சயா, ஜெயஸ்ரீ, தர்ஷினி, சாருபாலா, ரசிகா ஆகியோரை அழைத்து அடிக்கல் நாட்ட வைத்தார். இதில் அங்கிருந்த மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தி னர், ஆசிரியர்கள், நெகிழ்ச்சி அடைந்தனர்.
செந்தலைப்பட்டினம்
செந்தலைப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ரஹ்மத்துல்லா எம்.எஸ்.ஹெச்.லாபிர் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.