மயிலாடுதுறை, டிச.19 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் ஒன்றி யத்திற்குட்பட்ட கிள்ளியூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டி டம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கிள்ளியூர் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நபார்டு வங்கி நிதி உதவி யுடன் ரூ.62.50 லட்சம் மதிப் பீட்டில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாயன்று நடை பெற்றது. விழாவில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன், அடிக்கல் நாட்டி வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.