மயிலாடுதுறை, ஜூலை 3 - ஜெர்மனி நாட்டில் சாக்கோனி மாநிலம் புல்ஸ்நிட்ஸ் என்ற கிரா மத்தில் 10.7.1682 ஆம் ஆண்டு சீகன்பால்கு பிறந்தார். பள்ளிப் படிப்பை தொடர்ந்து ஹல்லே பல் கலைக்கழகத்தில் இறையியல் படிப்பை முடித்ததோடு, சில காலம் ஆசிரியராக பணியாற்றி யுள்ளார். 11.11.1705-ல் ஆயர் பட்டத்தை டென்மார்க் நாட்டில் பெற்றார். பின்னர் அந்நாட்டின் அரசரான 4 ஆம் பிரெடரிக் அழைப்பை ஏற்று, 1705 ஆம் ஆண்டு நவம்பர் 30-ல் தனது நன்பருடன் “பிரின்சஸ் சோபியா ஹெட்விக்” என்ற கப்பல் மூலம் 222 நாட்கள் பயணம் செய்து 1706 ஜூலை 9 அன்று தரங்கம்பாடி வந்தடைந்தார். 2 மாதங்களுக்கு பின்னர் தமிழ் மொழியை தீவிர மாக கற்க தொடங்கி அதில் புல மையும் பெற்றார் சீகன்பால்கு. 1712-ல் தரங்கம்பாடி அருகே யுள்ள கடுதாசிப்பட்டறை என்று இன்றும் அழைக்கப்படுகிற கிராமத் தில் அச்சுக்கூடம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடம் ஆகிய வற்றை அமைத்து, அச்சு இயந்தி ரத்தை கொண்டு, இந்தியா விலேயே முதன் முதலாக பை பிளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து, காகிதம் மூலம் அச்ச டித்து வெளியிட்டார். இத்துடன் தனது பணியை முடித்து கொள்ளா மல், ஓலைச்சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், ஆத்திச்சூடி, கொடுந்தமிழ் அகராதி, செந்த மிழ் அகராதி, இந்து சமய கட வுள்களின் வரலாறு உள்ளிட்ட ஏராளமான அரிய பெரும் நூல்களை முதன் முதலாக காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்ட பெருமை யும் அவரையே சாரும். 300 ஆண்டுகளுக்கு முன்பே சாதிய கொடுமைகளுக்கு எதிராக, பெண்களின் உரிமைகளுக்காக தனது மனைவி மரியா டாரத்தியு டன் பல்வேறு மக்கள் கிளர்ச்சி களில் ஈடுபட்டதோடு சாதித்தும் காட்டியுள்ளார்.
கல்வி அறிவால் தான் புறக்கணிக்கப்பட்ட மக்களை தலை நிமிர வைக்க முடியும் என நினைத்த சீகன்பால்கு, 1706-ல் பிற்பகுதியில் தரங்கம்பாடி இராஜ வீதியில் திண்ணைப் பள்ளியை அமைத்தார். அதன் பின்னர் அட்மிரல் தெரு வில் தாம் வசித்த வீட்டின் அருகி லேயே 1714-ல் பள்ளியை மாற்றிக் கொண்டதோடு, பெண்களுக்காக விதவைகளை ஆசிரியர்களாக நியமித்து, தையல் பயிற்சி பள்ளியை உருவாக்கி, அப்போதே மதிய உணவு திட்டத்தையும் அறி முகப்படுத்தி மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைத்து கல்வியை வளர்த்தார். தரங்கம்பாடி மட்டுமின்றி சுற்றி யுள்ள பல நூறு கிராமங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் சீகன் பால்குவின் பணி விரிவடைந்துள் ளது. தாம் வந்த பணியை பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு தமிழ்மொ ழியை வளர்ப்பதிலேயே காலத்தை கழித்த சீகன்பால்கு தரங்கம்பாடி யில் வெறும் 13 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தார். ஆனால் அவரது சேவைகளோ கணக்கில டங்காதது. 1718-ல் ஆசியாவின் முதல் புரட்டஸ்டாண்டு ஆலயத்தை கட்டிய அவர், 1719 பிப்ரவரி 23-ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சீகன்பால்கு தரங்கம்பாடியில் வசித்து வந்த அவரது வீட்டில், அவர் பயன்படுத்திய பொருட்கள், பழமையான அச்சு இயந்திரங்கள், அவர் காலத்து டேனிஷ் கலை நுணுக்கம் நிறைந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியக மாக செயல்பட்டு வருகிறது.
இவர் 1715 இல் தரங்கம்பாடி அருகிலுள்ள கடுதாசிப்பட்டறை கிராமத்தில் அச்சடித்து வெளியி டப்பட்ட பைபிள் (புதிய ஏற்பாடு) பிரதியில் ஒன்று, 2015 இல் தஞ்சா வூர் அருங்காட்சியகத்தில் காணா மல் போனது. இந்நிலையில், அந்த பைபிளை சிலை கடத்தல் பிரிவு லண்டனில் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அந்த பைபிளை தமிழகத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ள நிலையில், பழ மையான அந்த பைபிளை தரங்கம் பாடியில் சீகன்பால்கு வாழ்ந்த அவரது வீட்டில் அமைக்கப்பட் டுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினரால் பாது காத்து பராமரிக்கப்படும் அருங் காட்சியகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சீகன்பால் குவை பற்றியும் அவர் வசித்த, உருவாக்கிய இடங்களை கண்டு ரசித்தும் செல்கின்றனர். அவர் தரங்கம்பாடிக்கு வந்த ஜூலை 9 ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தரங்கம்பா டியில் அவரது நினைவைப் போற்றும் விதமாக மணிமண்டபம் ஒன்றை கட்ட வேண்டுமென வாலி பர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றி யச் செயலாளர் எம்.ஐயப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். - செ.ஜான்சன்