மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், கரூர் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலுவின் மகன் சிவசுப்பிரமணியம் - சண்முகவடிவு தம்பதியரின் புதல்வன் பிரசாத், சென்னை அன்பரசன் - சாந்தி தம்பதியரின் மகள் சுவேதாஸ்ரீ ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், திமுக சொத்துக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் அதிமுக தொழில்துறை அமைச்சர் சின்னச்சாமி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், தீக்கதிர் திருச்சி பொது மேலாளர் ஜெயபால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். இதில் சென்னை அயனாவரம் சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரம், சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கப்பட்டது.