கும்பகோணம், ஆக.9-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துகிலி கிராமத்தில் தேசிய கைத்தறி தினம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் மோகன் முன்னிலை வகித்தார். அரசு கொறடா கோவி.செழியன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். கோணுளாம்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபினேஷ் மற்றும் மருத்து வக் குழுவினர் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முத்ரா திட்டத்தின்கீழ் நெசவாளர்களுக்கு கடனுதவி கள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், பட்டுச்சேலை, காட்டன் சேலை, குறிஞ்சிப்பாடி கைலி, கரூர் பெட்சீட் ஆகியவற்றை கொண்ட கைத்தறி கண்காட்சி நடை பெற்றது.