districts

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் வேண்டும்

அரியலூர், ஜூலை 17-

     அனைத்துத் தொழிற்சங்க மாவட்ட மாநாடு அரியலூரில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு தொழிற்சங்க கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்ட பாணி தலைமை வகித்தார்.

     சிஐடியு மாவட்ட செயலாளர் பி.துரை சாமி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலா ளர் ரெ.மகேந்திரன், ஏஐடியுசி மாநிலச் செய லாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாநி லச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன், தொமுச போக்குவரத்து தலைவர் கே.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும். சம  வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.  குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் (epf) குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க  வேண்டும். அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஜூலை 26 அன்று மாவட்டம் முழு வதும் வேன் மூலம் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்களை எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் எஸ்.இராமசுவாமி முன்மொழிந்தார்.  

    முன்னதாக தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெ.மகேந்திரன் வர வேற்றார். ஐஎன்டியுசி மாவட்டச் செயலா ளர் டி.விஜயகுமார் நன்றி கூறினார்.