பேராவூரணி, மே 5-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை சரகம் மரக்கா வலசை கிராமத்தில் 30 ஆண்டுகளுக் கும் மேலாக மின் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு, மின் இணைப்பு பெறுவதற்காக வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், கிராம பொதுமக்கள் உண்ணாவிரத அறப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஊராட்சி மன்றம் அடிப்படை வசதி களை நிறைவேற்ற வேண்டும். ஆற்று முகத்துவாரத்தை தூர்வார வேண்டும். பொதுக் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். கருவாடு உலர்த்தும் களம் அமைக்க, பெண் மீனவர்களுக்கு காரங்குடா கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் வழங்க வேண்டும். தமிழ் நாடு அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு, இடத்தை அளவீடு செய்து தர வேண்டும். கரு வாடு உலர்த்தும் தளத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். குடி யிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க ஜமாத் நிர்வாகம் ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளுக்காக இந்த போராட்டம் திட்ட மிடப்பட்டது.
இதையடுத்து பேராவூரணி வட்டாட் சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் த. சுகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அரசுத் தரப்பில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை உதவி ஆய்வா ளர், மீன்வளத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம உதவியாளர் மற்றும் ஜமாத் தரப்பில் கமால் பாட்சா, ஊராட்சி மன்றத் தலை வர் நிரஞ்சனா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர். எஸ்.வேலுச்சாமி, சேகர், பெரியண் ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடன்பாடு
இதையடுத்து வட்டாட்சியர் த.சுகுமார் பேசுகையில், ‘‘மரக்காவ லசை கிராமம், காரங்குடா பகுதியில் வழங்கப்பட்ட விலையில்லா இல்லா வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து விட்டு வேறு புதிய பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு அரசு விதி களின்படி ஜூலை 15-ஆம் தேதியன்று பட்டா வழங்கப்படும்.
பொதுமக்கள் மின் இணைப்பு பெற்றிட ஏதுவாக ஜமாத் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உரிய ஆவணங் களை கொடுத்து உதவ வேண்டும். கூட்டுறவுத்துறை மூலமாக மீனவர் களுக்கு கடன் வழங்க வேண்டும். பொதுக் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால், உண்ணாவிரத அறப்போராட்டம் தற்காலிகமாக கை விடப்பட்டது.
சிபிஎம் எச்சரிக்கை
அரசுத்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுகளை விரைவில் அமல்படுத்த வேண்டும். தாம தமாகும் பட்சத்தில் மீண்டும் வலு வான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என பின்னர் பேசிய சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தெரி வித்தார்.