பாபநாசம், ஜன.25 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஆன்-லைன் முறைக்கு எதிர்ப்பு தெரி வித்தும், ஆன்-லைன் முறையை ரத்து செய்யக் கோரியும், பழைய நடை முறையிலேயே நெல்லை கொள்முதல் செய்யக் கோரி யும், ஒன்றிய அரசை கண்டி த்து சங்கு ஊதியும், நெல் மூட்டைக்கு மாலை அணி வித்து மணி அடித்தும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தினர் நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் சார்பில் பாபநாசம் அருகே அம்மா பேட்டையை அடுத்த அருந்த வபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திங்களன்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடே சன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜ், சிபிஐ அம்மாபேட்டை ஒன்றி யச் செயலாளர் ஆர்.செந்தில் குமார், தமிழ் மாநில விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.பாலு, நகரச் செயலாளர் கே.ராஜாராமன், ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.