திருச்சிராப்பள்ளி, ஏப்.11- இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி தென் மண்டல பொது மேலாளர் கே.ரவிக்குமார் செவ்வாயன்று திருச்சியில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியன் ரயில்வே சுற்றுலா, ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4 குளிர்சாதன பெட்டி கள், 7 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பேட்டரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டி கள் உள்ளன. சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலம் சென்னை சார்பில் ‘புண்ணிய தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுலா பயணம் அறிமுகப்படுத் தப்பட உள்ளது. இந்த சுற்றுப் பயணம் மே 5 அன்று தொடங்கி 11 நாட்கள் நடை பெறுகிறது. இதன் மூலம் பூரி, கோனார்க், கொல் கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி, அலகா பாத் ஆகிய இடங்களை பார்வையிட முடி யும். இதில் குளிர்சாதன பெட்டிகளில் பய ணம் செய்ய ரூ.35,651 கட்டணமாகவும், சாதாரண ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்ய ரூ. 20,367 கட்டணமாகவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு தங்குமிடம், பார்வையிடம் ஆகிய இடங்க ளில் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவு, இன்சூரன்ஸ், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை வழங்கப்படும். இந்த ரயில் வழித்தடம் கொச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, இராஜபாளையம், சிவகாசி, விருது நகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சா வூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும் பூர் மற்றும் விஜயவாடா வழியாக இயக் கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் 24 புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்து செல்லப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை பொது மேலா ளர் சுப்பிரமணி, திருச்சி மேலாளர் பாசித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.