கும்பகோணம் ஆக.4 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கைத்தறி பட்டு நெசவு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, போனஸ் வழங்கிட கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் கைத்தறி துறை அதிகாரி களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் பட்டு கைத்தறி நெசவாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் கா. அன்பழகனை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனசை பேச்சுவார்த்தையின் மூலம் அறிவித்து வழங்கிடவும், இதை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தப்பட்டது.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுச் செயலாளர் வி.எஸ்.மோகன், அண்ணா தொழிற்சங்க தலைவர் கே.ஜெ.லெனின், சிஐடியு பட்டு நெசவு கைத்தறி தொழிலா ளர் சம்மேளன மாவட்டப் பொருளாளர் எஸ்.சுப்பிரமணியன், ஏஐடியுசி மணிமூர்த்தி உள்ளிட்டோர் மனுவை வழங்கினர்.