கரூர், ஜூலை 23 -
அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்திற்கென மாதந்தோ றும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்டத்தின் 11-வது பேரவை அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. வட்டத் தலை வர் கோ.லட்சுமணன் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் வ. ஸ்டாலின் வரவேற்றார். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மொ.ஞானத்தம்பி நிறைவுரையாற்றினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கூடு தல் கட்டிடத்தில் அரசு ஊழி யர்கள், ஒப்பந்த தொழிலா ளர்கள், பொதுமக்கள் என தினமும் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பறைகள் தூய்மை யின்றி துர்நாற்றத்துடன் உள்ளன. தினமும் கழிப்ப றையை சுத்தம் செய்து சுகா தாரத்தைப் பேண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் துறைகளில் அதி களவில் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் முக்கிய வழித் தடங்களில் அரசு மகளிர் பேருந்துகள் இயக்க வேண் டும். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கூடுதல் கட்டிடத்தில் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில், ஆட்சியர் அலுவலக வளாகத் திற்குள் புதிதாக எஸ்பிஐ வங்கி ஏடிஎம் நிறுவ நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்திற்கென மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.