பெரம்பலூர், மே 15-
உன்னை அறிந்தால் மாணவர் கல்வி மேம்பாட்டு மையம் மற்றும் ஏணி அமைப்பு கல்வி வழிகாட்டு மையம் இணைந்து 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது.
மக்களுக்கான மருத்துவர் கழக மாநிலச் செயலாளர் சி.கருணாகரன் தலைமை வகித் தார். விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், உன்னை அறிந்தால் கல்வி மேம்பாட்டு மையம் நிர்வாகி கி.கலைநாதன், மரு.சி.த.ஜெயலட்சுமி, விஆர்எம் அகாடமி அக்ரி.மு.மாதவன், காவல் துணைக் கண்கா ணிப்பாளர் கோ.பாண்டியன் ஆகியோர் பேசினர்.
நிகழ்வில், 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. ஏராளமான மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.
மேலும் இணைந்த கரங்கள், லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி, விஆர்எம் ஐஏஎஸ் அகாடமி, வள்ளலார் ஐஏஎஸ் அகாடமி, இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள், கைமணம் சேவையகம் ஒருங்கி ணைப்புடன் பெற்றோரை இழந்த, மாற்றுத் திறனாளி மாணவர்கள் இலவச உயர் கல்வி பெற உதவி செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.